சேலம், நவ.3- இந்திய விவசாயத்தை அழிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பெத்தநாயக்கன்பாளையம் பேருந்து நிலையம் முன்பு ஞாயி றன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. விவசாயிகளுக்கம், விவசாய தொழிலாளர்களுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் புதிய கொள்கைகளை மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தெற்காசிய நாடுகள் ஒன்றிணைந்து விவசாய துறையில் மேம்பாடு செய்வதற்கு எனச் சொல்லி விவசாய விளைபொருட் களை வரியின்றி இறக்குமதி செய்யும் ஒப்பந்தத்தில் மத்திய அரசு (நவ.4) திங்களன்று கையெ ழுத்திட உள்ளது. இதனால் இந்திய சந்தையில் பல்வேறு நாடுகளில் இருந்து விவசாய பொருட்கள் இறக்குமதியாகும். ஆனால் இந்திய பொருட்களின் மதிப்பு குறைந்து விவசாயிகள் கடும் பாதிக்குள்ளா வார்கள். எனவே தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பில் விவசாயம் சம்பந்தமான கோப்புகளில் மத்திய பாஜக அரசு கையெழுத்திடக் கூடாது. மாநில அரசு தமிழக விவ சாயத்தை அழித்திடும் ஒப்பந்த சாகுபடி தனிச்சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் எம்.ராமசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எ.ராம மூர்த்தி, துணை செயலாளர் பி. தங்கவேலு, பெத்தநாயக்கன் பாளையம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றிய செய லாளர் என்.கிருஷ்ணமூர்த்தி உள் ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு மத்திய பாஜக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.