சேலம், நவ.19- தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த பிஎப் பணத்தை சேலம் மாந கராட்சி முறைகேடு செய்துள்ளதை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. சேலம் மாநகராட்சியில் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் பல் வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மாநக ராட்சியில் பணியாற்றும் தொழி லாளர்களிடம் பிடித்தம் செய்த பிஎப் பணத்தை பல ஆண்டுகளாக சம்பந் தப்பட்ட துறைக்கு செலுத்தாமல் மாநகராட்சி நிர்வாகம் மெத்தனப் போக்கில் உள்ளது. இதேபோல் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத் திற்கு தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த பணத்தை மாநகராட்சி நிர் வாகம் சட்டவிரோதமாக சொசைட் டியில் செலுத்தவில்லை. மாநக ராட்சி பிடித்தம் செய்த பணத்தை செலுத்தாததால் தொழிலாளர்கள் வட்டி கட்டும் நிலை உருவாகி யுள்ளது. ஆரம்பகாலம் முதலே மாநகராட்சியில் பல கோடிக் கணக்கில் காசோலை ஊழல் நடந்துள்ளது. மேலும் தொழிலாளர் களின் பணமும் தற்போது முறை யற்ற வகையில் சுரண்டப் பட்டு வருகிறது. இப்பிரச்சினைகளை களைய ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து விசாரணை நடத்தி குற்ற வாளிகளை தண்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவ் வாயன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் செயலாளர் எ.கோவிந்தன் தலைமை தாங்கினார். இதில் சங்கத் தின் தலைவர் எஸ்.கே.தியாக ராஜன், சிஐடியு மாவட்ட செய லாளர் டி.உதயகுமார், மாவட்ட பொருளாளர் வி.இளங்கோ, மாவட்ட நிர்வாகி சி.கருப்பண்ணன் உள்ளிட்ட திரளான தொழிலாளர் கள் கலந்து கொண்டனர்.