tamilnadu

img

குறுகிய காலத்தில் 2 லட்சம் வீடுகள் கட்டி முடித்த முதல் மாநிலம் கேரளம்

திருவனந்தபுரம், பிப்.27- திருவனந்தபுரத்தில் உள்ள புத்தரிகந்தம் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெறும் லைப் மிஷன் திட்டத்தில் இரண்டு லட்சம் வீடுகள் நிறைவடைவதை கேரள முதல்வர் பினராயி விஜயன்  அறிவிக்கிறார். இதன் மூலம், நாட்டில் அதிக எண்ணிக்கையிலான வீடுகள் குறுகிய காலத்தில் முடித்த மாநிலமாக கேரளா இருக்கும் என்று அமைச்சர்கள் ஏ.சி மொய்தீன், கடகம்பள்ளி சுரேந்திரன் ஆகியோர் தெரிவித்தனர். இது குறித்து வியாழனன்று அவர்கள் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: லைப் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருதுகளை முதல்வர் வழங்க உள்ளார். காரகுளம் ஏணிக்கரையில் கட்டி முடிக்கப்பட்ட வீட்டின் திறப்பு விழாவில் முதல்வர் பங்கேற்பார். அன்றைய தினம் (பிப்.29) பகல் 3 மணிக்கு அனைத்து மாவட்டங்களி லும் பஞ்சாயத்து அளவில் பய னாளிகளின் சங்கமம் நடைபெறும். 

திட்டத்தின் முதல் கட்டமாக ரூ.670 கோடி செலவில் 52,050 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. இரண்டாம் கட்ட மாக 74,674 வீடுகள் கட்டப்பட்டன. லைப் பி.எம்.ஏ.ஒய் மூலம் கிராமப் புறங்களில் 47,144 மற்றும் நகர்ப்புறங் களில் 16,640 வீடுகளும் கட்டப்பட்டன. இதற்காக மாநில அரசு ரூ.2,876.23 கோடியை செலவிட்டுள்ளது. பட்டி யல் இனத்துறை 18,811, பட்டியல் பழங்குடியினர் துறை 738 மீன்வளத்துறை 3725 வீடுகளை நிறைவுசெய்தன. பூர்த்திசெய்யப்பட்ட மொத்த வீடுகளின் எண்ணிக்கை 2,14,000 ஆகும்.  திட்டத்தின் மூன்றாம் கட்டம் ஏற்கனவே தொடங்கிவிட்டது. வீடும் நிலமும் இல்லாதவர்களுக்கு வீடு கட்டுவது இதில் அடங்கும். 1,06,925 குடும்பங்கள் இதில் பயனாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

பினராயி மகிழ்ச்சி

முன்னதாக இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதலமை ச்சர் பினராயி விஜயன், தலைசாய்க்க  சொந்தமாக ஓரிடம் என்கிற கனவு டன் லட்சக்கணக்கான குடும்பங்கள் நாட்களை நகர்த்தி வந்தன. அவர்களது கனவுகளை நிறைவேற்ற அரசு துணை நின்றது. அது லைப் திட்டமாக வடிவம் பெற்றது. அந்த கனவுகள் நனவாகின்றன. ஒன்றிரண்டல்ல, இரண்டு லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 2 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டதை அறிவிக்கும் நிகழ்ச்சி இம்மாதம் 29ஆம் தேதி நடை பெற இருப்பது மகிழ்ச்சிஅளிக்கிறது.  இதனிடையே லைப் திட்டத்தின் மூன்றாம் கட்ட பணிகள் துவக்கப் பட்டுள்ளன. இது சொந்த நிலம் இல்லா தவர்களுக்கானது. அவர்களுக்கும் வாழ்வளிக்க அரசு உறுதிபூண்டுள் ளது. எல்டிஎப் அரசின் வளர்ச்சி கொள்கை யின் ஒரு பகுதியே வீடற்றவர்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் உயர்வான வாழ்க்கை நிலைமைகளை உருவாக்குவதாகும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.