தஞ்சை அரசு மருத்துவர்கள் சாதனை
தஞ்சாவூர், டிச.14- தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாகச் சிறுவனுக்கு உணவு, சுவாசக் குழாய் களில் மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் மருத்துவக் கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ் வெள்ளிக்கிழமை தெரி வித்தது: திருவாரூர் மாவட்டம், மன்னார் குடி அருகேயுள்ள பரவாக்கோட்டை தோப்புத் தெருவைச் சேர்ந்தவர் ஜோதி பாஸ். இவரது மகன் வெங்கடேசன் (17) கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த நவம்பர் மாதத்தில் வெங்கடேசனை அவரது தாயார் ஜமுனாராணி திட்டினார். இதனால், மனமுடைந்த வெங்கடேசன் விஷம் குடித்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வெங்கடேசன் தஞ்சாவூர் மருத் துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அளிக் கப்பட்ட சிகிச்சைக்குப் பிறகு குணம டைந்து வீட்டுக்குத் திரும்பினார். ஆனால், வீட்டில் உணவு சாப்பிடும் போது புரையேறியது. இதனால், அவர் தொடர்ந்து சாப்பிட முடியாமல் அவதிப் பட்டு வந்ததால், மீண்டும் அவர் தஞ்சா வூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் பரி சோதனை செய்த போது உணவுக் குழா யும், சுவாசக்குழாயும் ஒன்றுடன் ஒன்று ஒட்டி, ஓட்டை விழுந்து அழுகிய நிலை யில் இருந்ததும், நுரையீரலில் சளி அதிக அளவில் தங்கியிருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, நவ. 13 ஆம் தேதி இதய சிகிச்சை மருத்துவர்கள் குமரவேல், அரவிந்தன், மயக்க மருந்து மருத்துவர்கள் குமரன், பாலாஜி ஆகி யோர் கொண்ட குழுவினர் வெங்கடேச னின் மார்புப் பகுதியை இரண்டாகப் பிளந்து அறுவை சிகிச்சை செய்தனர்.
அப்போது உணவு குழாய், சுவா சக் குழாயில் அழுகிய பகுதியை மருத்து வர்கள் நீக்கி விட்டு, இரு குழாய்களை யும் தனித் தனியாகப் பிரித்தனர். இதை யடுத்து, உணவு குழாயின் இரு பகுதி களையும், சுவாசக் குழாயின் இரு பகுதிகளையும் ஒன்றாக இணைத்து தையல் போட்டனர். இந்த அறுவை சிகிச்சை 4 மணி நேரம் நடைபெற்றது. பின்னர் தொடர் கண்காணிப்பில் இருந்த வெங்கடேசன் தற்போது முழு மையாகக் குணம் அடைந்துள்ளார். அவ ரால் உணவு சாப்பிட முடிகிறது. இம் மருத்துவமனையில் இதுபோன்ற அறுவை சிகிச்சை செய்யப்படுவது இதுவே முதல் முறை” என்றார் குமுதா லிங்கராஜ். மருத்துவக் கண்காணிப்பாளர் ஏ. பாரதி, நிலைய மருத்துவ அலுவலர் செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.