சென்னை,அக்.31- ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற படகுகளில் 8 படகு களைத் தவிர மற்ற படகுகள் கரை திரும்பிவிட்டதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா ஆகியோர் 332 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு கோடியே 26 லட்சத்து 30 ஆயி ரத்து 12 ரூபாய் மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகளை வழங்கினர். பின்னர் அமைச்சர் ஜெயக் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், புயல் எச்சரிக்கை குறித்து ஆழ்கடலில் உள்ள அனைத்து மீனவர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுவிட்டது. ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற படகுகளில் 8 படகுகளைத் தவிர மற்ற படகுகள் கரை திரும்பி விட்டன என்று தெரிவித்தார்.