tamilnadu

img

நல்லாசிரியர் விருதுக்கு புதிய நெறிமுறை

சென்னை,ஜூலை 22- வணிக ரீதியில் தனிப்பயிற்சி வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களின் பெயரை  டாக்டர். ராதாகிருஷ்ணன் விருதிற்கு பரிந்துரைக்க கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. டாக்டர்  சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5ஆம்  தேதி ஆசிரியர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டா டப்படுகிறது. டாக்டர்  ராதாகிருஷ்ணனின் அன்றைய தினம் தகுதியுள்ள ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுவது வழக்கம்.  தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய 17 வழிகாட்டு நெறிமுறைகளை  பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. சுய ஒழுக்கம், நேரம் தவறாமை, மாணவர் மற்றும் பள்ளியின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க பாடுபட்டவர்கள், அரசியல் கட்சி சாராதவர்கள், தனியாக  டியூஷன் எடுக்காதவர்கள் உள்ளிட்டோரை அடையாளம் கண்டு பரிந்துரைக்கு மாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்  கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஆகஸ்ட் 14ஆம் தேதிக்குள்  பட்டியலை அனுப்பிவைக்க உத்தரவிடப் பட்டுள்ளது. தகுதியற்ற ஆசிரியர்க ளைப் பரிந்துரைக்கும் தேர்வுக்குழுவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்  படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.