மேலவளவு படுகொலை குற்றவாளிகளை விடுதலை செய்ததற்கு எதிர்ப்பு
மதுரை, நவ. 22- மேலவளவு கொலைக் குற்றவாளி கள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர் ப்புத் தெரிவித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் மதுரையில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடத்த கடைசி நேரத்தில் அனுமதி மறுத்து காவல் துறையினர் கைது செய்தனர். 1997- ஆம் ஆண்டு மதுரை மாவட் டம் மேலவளவு ஊராட்சித் தலைவ ராக போட்டியிட்டு வெற்றி பெற்ற முரு கேசன் உட்பட ஏழு பேர் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அவர்கள் மீதான தண்டனையை உறுதிசெய்தது. இதையடுத்து அனைவரும் சிறை யில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய நான்குபேர் ஏற்கனவே சிறையில் இருந்து விடுதலை செய்யப் பட்டனர். இந்த நிலையில் கடந்த 8-ஆம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மேலவளவு கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த 13 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த மாநகர காவல் துறையிடம் அனுமதி கோரப் பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் ஒலிபெருக்கி வைக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது. ஆயினும் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநிலப் பொதுச் செய லாளர் கே.சாமுவேல்ராஜ், மாநில துணைத் தலைவர் ஆர்.கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் எம்.பாலசுப்பிர மணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் மா.கணேசன், மா.செல்லம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக போராட்டத்திற்கு காவல் துறையினர் அனுமதி மறுக்கப்பட்ட தால் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்த னர். இதையடுத்து அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மாநிலப் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், மேலவளவு ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட ஏழு பேரை கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்று சிறையிலிருந்த 13 பேரை தமிழக அரசு விடுதலை செய்துள்ளது. இது சாதி ஆணவப் போக்கை வெளிப்படுத்துகிறது. மேல வளவு படுகொலை மிகக் கொடூர மானது. இந்திய அரசுக்கு ஏற்பட்ட ஒரு கரும்புள்ளி. அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசு தனது கடமையிலிருந்து தவறுகிறது. 13 பேரின் விடுதலை சட்டத்திற்கு புறம்பானது. முறைகேடானது என நீதி மன்றம் கண்டித்துள்ளது. தமிழக அரசு 13 பேரின் விடுதலையை திரும்பப் பெற்று மீண்டும் அவர்களை சிறை யிலடைக்க வேண்டும். 13 பேரின் விடுதலைக்கு எதிராக போராடும் எங்களை காவல்துறை அடக்குமுறையைக் கையாண்டு கைதுசெய்வது கண்டனத்திற்குரியது என்றார்.