இராமநாதபுரம்:
இராமநாதபுரம் மற்றும் தேவிப்பட்டினம் பகுதிகளில் மீன்களின் விலை பாதியாக குறைந்துள்ளது.மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்குசென்று திரும்பிய சூழலில்,மீன்களின் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்து ள்ளதாக மீன் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 400 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ முரல் மீன் 300 ரூபாய்க்கும், இரால் ஒரு கிலோ 500 ரூபாயில் இருந்து 250 முதல் 300 ரூபாய்க்கும் விற்பனையாவதாக தெரிவித்தனர். இதேபோல் நண்டுகளின் விலையும் 400 ரூபாயில் இருந்து 300 ரூபாய்க்கு விற்பனையாவ தாக தெரிவித்தனர்.