tamilnadu

img

அரசு பேருந்துகளை இயக்க திட்டம்: கட்டணம் உயர்கிறது?

சென்னை, மே 8- கொரோனா வைரஸ் தாக்கம் எதி ரொலியால் நாடு முழுவதும் கடந்த  மார்ச் 24 ஆம் தேதியிலிருந்து ஊர டங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பேருந்து, ரயில், விமான  சேவைகள் முற்றிலும் நிறுத்தப் பட்டன. சிறப்பு விமானங்கள் மற்றும் முக்கிய அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் குறிப்பிட்ட பேருந்து- ரயில் போக்குவரத்து நடைபெறுகிறது. ஆனாலும் பொதுமக்களுக்கு பேருந்து, ரயில் இன்னும் இயக்கப்பட  வில்லை. ஊரடங்கு உத்தரவு வருகிற  17 ஆம் தேதி முடிவடைய உள்ளதால் அதன் பிறகு பேருந்து ரயில்கள் இயக்கப்படுமா? என பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கு முடிந்த (மே17) பிறகு  பேருந்துகளை இயக்க போக்கு  வரத்து கழகங்கள் தயாராக இருக்கு மாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக போக்கு வரத்து துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் போக்குவரத்து கழகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் ஊரடங்கு முடிந்த பிறகு 50 சதவீதம் பயணிகளுடன் அரசு  பேருந்துகளை இயக்க தயாராக இருக்க வேண்டும். கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஒட்டுனர், நடத்து னர்களுக்கு முக கவசம், கையுறை மற்றும் கிருமி நாசினி திரவம் வழங்கப்படும். பேருந்து இயக்குவதற்கு முன் ஓட்டுனர், நடத்துனர்கள் காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

பயணிகள் இருக்கையில் அமர  “மார்க்“ செய்ய வேண்டும். பேருந்தில்  நின்று பயணம் செய்தால் போதிய இடைவெளி அவசியம். கட்டாயம் பேருந்தின் ஜன்னல் திறந்திருக்க வேண்டும். பேருந்து நிலைய நிறுத்தத்தில் 5 மீட்டர் இடைவெளி விட்டு நிறுத்த அறிவுறுத்தப்படுகிறது. அதிக கூட்டம் கூடாதவாறு பயணி கள் 6 அடி இடைவெளியில் நிற்பதை உறுதி செய்ய வேண்டும். பேருந்தில் பயணம் செய்ய வரும்  பொதுமக்கள் முககவசம் அணிந்து வர வேண்டும். தவறினால் பயணம் செய்ய அனுமதிக்கப்படாது. பொது மக்கள் வரிசையில் நின்று பேருந்து களில் ஏறுவதை உறுதி செய்ய வேண்டும்.

அதேபோல் கூகுள்பே, இ-பே போன்றவை மூலம் டிக்கெட் கட்டணம்  செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். முடிந்தளவு மாதாந்திர பாஸ் அட்டை பயன்படுத்தலாம். பொதுமுடக்கம் முடிந்து பேருந்து கள் இயக்க திட்ட மிடும்போது இது  போன்ற நடவடிக்கை பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் உள்ள 8 போக்கு வரத்து மண்டலங்களும் இதை கவன முடன் செயல்படுத்த தயாராக இருக்க  வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மாநில அரசின் வரி வரு வாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்துகள் மீண்டும் இயக்கப்படும் போது அவற்றின் கட்ட ணம் உயர்த்தப்படும் என தெரிய வந்துள்ளது. நிதிச்சுமையை சமாளிக்கும் வகை யில் தமிழ்நாடு அரசு பேருந்து பயணக்  கட்டணத்தை 15 முதல் 20 சதவீதம்  உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படு கிறது. இது குறித்த அறிவிப்பு விரை வில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.