tamilnadu

img

100 நாள் வேலை கூலிக்கு லஞ்சம்: தொழிலாளர்கள் முற்றுகை

திருவண்ணாமலை,ஏப்.20- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வளையாம்பட்டு பகுதியில் சுமார் நூற்  றுக்கும் மேற்பட்டோர் நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளியை பின்பற்ற அனைத்து தரப்பு  கூலி தொழிலாளர்களுக்கும், தமிழக அரசு  சார்பில் தங்களது வீட்டிலேயே தனிமைப்ப டுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 100க்கும் மேற்பட்டோர் 100 நாள் வேலையில் பணி யாற்றி வந்த தொழிலாளர்கள் கணக்கில்  தலா ஒரு நபருக்கு, 2000 ரூபாய் செலுத்தப்  பட்டது. அதில்  வங்கி கணக்கு வைத்தி ருக்கும் நபர்களை தனித்தனியாக அழைத்து, அதில் ஆயிரம் ரூபாய் எடுத்துக்கொண்டு மீத முள்ள ஆயிரம் ரூபாய் திருப்பி கொடுக்கும்  படி ஊராட்சி செயலாளர் மற்றும் ஊராட்சி  மன்றத் தலைவர் வலியுறுத்தி வருவதாக தொழிலாளர்கள் குற்றச்சாட்டு தெரி வித்தனர்.

அரசு வழங்கிய 2000 ரூபாய் பணத்திலி ருந்து எதற்காக ஆயிரம் ரூபாய் கேட்கிறீர் கள் என்று அப்பகுதி பொதுமக்கள் கேள்வி  எழுப்பினர். அப்போது ஊராட்சி மன்றத் தலை வர் மற்றும் ஊராட்சி செயலாளர் இருவரும் தங்களது பகுதிக்கு சாலை வசதி செய்துதர,  ஆயிரம் ரூபாய்  கொடுக்குமாறு  மிரட்டுவதா  கவும் தெரிவித்தனர். கொரானா வைரஸ் அச்சத்தால் வேலையின்றி தவித்து வரும் நிலையில் குழந்தைகளை வைத்துக் கொண்டு  உணவு உண்பதற்கு கூட வழியில்லாமல் தவித்து வரும் நிலையில் அரசு வழங்கிய இந்த நிதியிலிருந்து லஞ்சம் கேட்பது எந்த விதத்தில் நியாயம் என ஆத்திமடைந்த அப்ப குதி இளைஞர்கள் ஊராட்சி மன்ற தலைவர்  அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

பணத்தை கேட்டதற்கு என்ன காரணம் என சரியான விளக்கம் தராததால் ஒரு கட்டத்தில் எல்லையை மீறிய இளைஞர்கள்  சாலையின் நடுவே அமர்ந்து தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கம் காவல்துறை ஆய்வாளர் அப்பகுதி இளைஞர்களிடையே  சமரச பேச்சில் ஈடுபட்டு சமூக இடை வெளியை  பின்பற்ற அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.