tamilnadu

img

மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின் போது தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் என பல இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 253 பேர் உயிரிழந்துள்ளனர் என இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இந்நிலையில் உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. இலங்கையிலிருந்து வரும் பயணிகள் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு வெளியே அனுப்பப்படுகின்றனர்.

இலங்கை பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து தமிழகத்திலும் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.