tamilnadu

img

உலக மகளிர் தின விழா

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நகரக்குழு சார்பில் உலக மகளிர் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு மாதர் சங்கத்தின் நகரத் தலைவர் யு.அஞ்சம்மாள் தலைமை வகித்தார். ‘பெண் அறம்’ என்ற தலைப்பில் கவிஞர் மு.கீதா, ‘மறுக்கப்பட்ட நீதி’ என்ற தலைப்பில் அறிவியல் இயக்க மாவட்ட இணைச் செயலாளர் க.உஷாநந்தினி ஆகியோர் உரையாற்றினர். முன்னதாக நகரச் செயலாளர் கே.காயத்ரி வரவேற்க, பொருளாளர் மு.சித்ரா நன்றி கூறினார்.