புதுக்கோட்டை, பிப்.18- புதுக்கோட்டை மாவட்டத்தில் 36 முதுநிலை வருவாய் ஆய்வாளர்க ளுக்கு சட்டத்திற்கு புறம்பாக துணை தாசில்தாராக பதவி உயர்வு வழங் கப்பட்டதை கண்டித்து, மாநில வரு வாய் துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலகதை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வருவாய்த்துறை அலுவலர்கள் வாயில் கருப்புத்துணியை கட்டிக் கொண்டு கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். சங்க மாவட்ட தலைவர் சக்திவேலு தலைமை தாங்கினார். சங்க மாநில தலைவர் சிவக்குமார் உள்படபலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சங்கத்தின் மாநில தலைவர் சிவக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ஆட்சியர் தங்களை அழைத்து பேச வேண்டும். மாவட்ட வருவாய் அதிகாரி ஏற்கனவே தங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண்ப தாகக் கூறி இருந்த நிலையில் இரவு பகலாக காத்திருந்தும் இது வரையில் தங்களிடம் மாவட்ட நிர்வா கம் சார்பில் எந்த ஒரு பதிலையும் கூறவில்லை. மாநில வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்ட ஆணையை உடனடியாக ஆட்சியர் நிறைவேற்ற வேண்டும். மாநில வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் நியாயமான கோரிக்கை இது. நீதிமன்றத்திற்கு முரணாக ஆட்சியர், 36 துணை தாசில்தார்க ளுக்கு பதவி உயர்வு வழங்கி உள்ளார். இதற்கு வருவாய் நிர்வாக ஆணையர் 36 துணை தாசில்தார் கள் பதவி உயர்வை ரத்து செய்ய கோரியும் இதுவரை ரத்து செய்ய வில்லை உடனடியாக எங்களது கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் மாவட்ட அளவில் உள்ள இந்த போராட்டம் மாநில அளவில் விரிவுபடுத்தப்படும். மேலும் இந்த கோரிக்கைக்கு முடிவு எட்டாவிட்டால் வருகிற 25-ந் தேதி வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி, 36 துணை தாசில்தார்கள் பதவி உயர்வை ரத்து செய்ய உத்தரவிட்டும் இதுவரை ரத்து செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றார்.