tamilnadu

img

சாலையை சீரமைக்கக் கோரி புதுகையில் மறியல் போராட்டம்

புதுக்கோட்டை, செப்.3- புதுக்கோட்டையிலிருந்து போஸ் நகர் வழியாக மணிப்பள் ளம் செல்லும் சாலையை சீர மைக்க வலியுறுத்தி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சாலை குண்டும் குழியுமாக உள்ளதைக் கண்டித்தும், புதிய தார்ச்சாலை அமைக்க வலியுறுத்தி யும் கடந்த 17.06.2019 அன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட் டது. இதனைத் தொடர்ந்து புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டு பாதியிலேயே நிறுத் தப்பட்டது. இதனால், சாலையில் பரப்பப்பட்ட சரளைக் கற்களால் வாகனம் ஓட்ட முடியாமலும், அந்தப் பகுதியில் தூசி படர்ந்த தாலும் பொதுமக்கள் மிகுந்த சிர மத்திற்கு உள்ளாகினர். இதனைத் தொடர்ந்து சாலை யை உடனடியாக செப்பனிடக் கோரி வாலிபர் சங்கத்தின் சார்பில் போஸ் நகரில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் துரை.நாரா யணன் தலைமை வகித்தார். நக ரச் செயலாளர் எஸ்.பாபு, பொரு ளாளர் டேவிட், துணைச் செயலா ளர் ஜெகன், சிபிஎம் நகரக்குழு உறுப்பினர் ஆர்.சோலையப்பன், சிஐடியு சார்பில் கோவிந்தராஜ் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.  சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வாலிபர் சங்க நிர்வாகி களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து கோட்டாட்சி யர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. கோட் டாட்சியர் தண்டாயுதபாணி தலை மையில் பேச்சுவார்தை நடைபெற் றது. இதில் வரும் செப்.5-ஆம் தேதி சாலை அமைக்கும் பணி தொடங் கப்படும் என உறுதியளித்தனர். இத னைத் தொடர்ந்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.