புதுக்கோட்டை, நவ.19- புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் திருமயம் தாலுகா குலமங்கலம் இளம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் தெரிவித்திருப்பது: நாங்கள் அனைவரும் ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்த ஏழை மக்கள். எங்களுக்கு என்று நிரந்தர தொழிலும், நிரந்தர வருமானமும் கிடையாது. கூலி வேலை பார்த்துத்தான் குடும்பத்தை நடத்தி வரு கிறோம். எங்களுக்கு தமிழக அரசால் 1989-ம் ஆண்டு காலனி வீடு கட்டிக்கொடுக்கப்பட்டது. மேற்படி வீடுகள் தற்போது இடிந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இருப்பினும் நாங்கள் தங்குவதற்கு வேறு வீடு இல்லாததால், நாங்கள் வேறுவழியின்றி அதே வீட்டில் எப்போது உயிருக்கு ஆபத்து நேருமோ என்ற அச்சத்துடனேயே வசித்து வரு கிறோம். எனவே தாங்கள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த வீடுகளை இடித்து அகற்றி விட்டு, அதே இடத்தில் எங்களுக்கு புதிய வீடுகள் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது.