tamilnadu

img

மழைநீர் சேமிப்பு மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை

புதுக்கோட்டை, அக்.24-  புதுக்கோட்டை மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை நகரப் பகுதிகளில் உள்ள வீடுகளை ஆய்வுசெய்த பிறகு மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்ததாவது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்களின் மூலம் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உள்ளது தொடர்ந்து உறுதி செய்யப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை நகராட்சியில் பகுதியில் உள்ள 32,000 வீடுகளில் 25,622 வீடுகளிலும், அறந்தாங்கி நகராட்சி பகுதியில்  உள்ள 12,246 வீடுகளில் 6,292 வீடுகளிலும், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. 8 பேரூராட்சிகளில் உள்ள 37,011 வீடுகளில் 19,626 வீடுகளிலும், 497 கிராம ஊராட்சிகளில் 3,68,204 வீடுகளில் இதுவரை 2,17,825 வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.  ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் உள்ள 3,263 அரசு கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுதவிர பொதுப்பணித்துறையின் கட்டுபாட்டில் உள்ள 583 அரசு கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், மீத முள்ள கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் மழைப்பொழிவில் இருந்து கிடைக்கக்கூடிய நீர் சேமிக்கப்பட்டு  நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.