பொன்னமராவதி, நவ.16- புதுக்கோட்டை பொன்னமராவதியில் மக்களைத் தேடி மாவட்ட நிர்வாகம் என்ற தலைப்பில் மனு நீதி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமை வகித்தார். சுகா தாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதியோர் உதவித்தொகை உள்ளிட்டவை கோரிய 501 பய னாளிகளுக்கு 38 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பிக்கை வைரமுத்து பழனியாண்டி இலுப்பூர் கோட்டாட்சியர் டெய்சி குமார், அதிமுக ஒன்றியச் செயலாளர் பழனியான்டி, பொன்னமராவதி வட்டாட்சியர் திரு நாவுக்கரசு, ஒன்றிய ஆணையர்கள் வேலு, சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.