பொன்னமராவதி, ஜூன் 8- சிபிஎம் கோரிக்கையை ஏற்று பொன்னமராவதியில் சுமார் 100 குடும் பங்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் குழாய் அடைப்பை சரி செய்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. புதுக்கோட்டை பொன்னமராவதி பேரூராட்சியில் உள்ள 5-ஆவது வார் டின் ஒரு பகுதியில் சுமார் 100 குடும்பங் கள் வசித்து வருகிறார்கள். இங்கு பேரூராட்சி நிர்வாகத்தால் காவிரி கூட்டுக் குடிநீர் குழாய்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலை யில் குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரண மாக கடந்த ஆறு மாதமாக குடிநீர் விநியோகம் தடைபட்டு இருந்தது. உடனடியாக குடிநீர் குழாய் அடைப்பை சரி செய்து தடையின்றி பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஎம் பொன்னமராவதி சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ் கோடி தலைமையிலான ஊழியர்கள் ஒரு வாரமாக பணி செய்து குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட அடைப்புகளை சரி செய்தனர். பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்த செயல் அலுவருக்கு, சிபிஎம் சார்பில் பொன்ன மராவதி ஒன்றியச் செயலாளர் என்.பக்ருதீன் நன்றி தெரிவித்துள்ளார்.