tamilnadu

சென்னையில் ரூ.50 கோடியில் விபத்து கால மறுவாழ்வு மையம் 

 புதுகை, ஜூலை 22- புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அனு ராதாவிற்கு தமிழக முதல்வர் விரைவில் பரிசுத் தொகை யினை அறிவிப்பார். தமிழக முதல்வரை வீராங்கனை அனு ராதா விரைவில் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். சென்னையில் 50 கோடி ரூபாய் மதிப்பில் விபத்து கால மறுவாழ்வு மையம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. மருத்துவத் துறை மானியக் கோரிக்கையின் போது அறி விக்கப்பட்ட 108 திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள மருத்துவ மேற்படிப்பிற்கான நெக்ஸ்ட் தேர்வை முதலில் எதிர்த்த மாநிலம் தமிழகம் தான். தமிழக அரசு ஒரு போதும் நெக்ஸ்ட் தேர்வை அனுமதிக்காது என்றார்.