tamilnadu

img

ஆர்எஸ்எஸ் சிந்தனைகளே புதிய கல்விக் கொள்கை

சென்னை, ஜூலை 31 - ஆர்எஸ்எஸ் சிந்தனைகளை புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையாக மத்திய அரசு வெளியிட்டுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா கூறினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு  புதனன்று (ஜூலை 31) சென்  னைக்கு வந்த அவருக்கு  அக்கட்சியினர் வரவேற்பளித்த னர். இதனைத் தொடர்ந்து பாலன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமக்கு வாழ்த்து தெரிவித்த அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழறிஞர்கள், திரைத் துறையினர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார். பெரும் பொறுப்பை தமக்கு கட்சி அளித்துள்ளதாகவும், அதனை வெற்றிகரமாக நிறைவேற்று வேன் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.  மேலும் அவர் கூறியதாவது: இந்தியாவில் தேர்தல் சீர்திருத்தம் செய்ய வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் நேர்மையாக நடுநிலையோடு செயல்படவில்லை. எனவே தேர்தல் ஆணையர்களை  தேர்வுக்குழு (கொலிஜியம்) மூலம் நியமிக்க வேண்டும்.

ஆர்எஸ்எஸ் கொள்கை களையே பாஜக செயல்படுத்து கிறது. அதற்கேற்ப புதிய  கல்விக் கொள்கை வடிவமைக்கப்  பட்டுள்ளது. அதனை எதிர்க்கி றோம். தொழிலாளர்களுக்கு பாதகம் ஏற்படுத்தும் வகையில் தொழிலாளர் சட்டங்களை திருத்துகின்றனர். மசோதாக்கள் மீது எதிர்க்கட்சிகள் கூறும் கருத்துக்களை கேட்காமல், நிலைக்குழு, தெரிவுக் குழுக்களுக்கு அனுப்பாமல் தனக்குள்ள பெரும்பான்மையை வைத்து நிறைவேற்றி விடுகிறது. ஜனநாயக நெறிமுறைகளை மீறி செயல்படுகிறது. எம்எல்ஏ, எம்.பி.,-க்களை கட்சித் தாவ ஊக்குவிக்கிறது. டெல்டா பகுதியை சிறப்பு வேளாண் மண்டலமாக அறி விக்க விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருவதை பிரதமர் உதாசீனப்படுத்துகிறார். ஜனநாயக பண்புகளையும், அடிப்படைகளையும் மதிக்கா மல் செயல்படுகிறது. பிரதமர் கூட்டாட்சித் தத்துவம் பேசிக் கொண்டே மாநில உரிமைகளை பறித்து வருகிறார். கும்பல் கொலை, கும்பல் பாலி யல் பலாத்காரம் போன்றவற்றின் மூலம் உள்நாட்டு கலவரத்தை உருவாக்கி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள பாஜக முயற்சிக்கிறது. இன்றுள்ள சூழ லில் இடதுசாரி சக்திகளின் ஒற்று மையை மேம்படுத்த விவாதித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.