வாலிபர், மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
மதுராந்தகம், ஆக. 11 - மதுராந்தகம் அரசு வட்டார தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள், மருந்துகள் பற்றாக்குறையை கண்டித்து செவ்வா யன்று (ஆக.11) கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், மது ராந்தகத்தில் அரசு வட்டார தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகி றது. இம்மருத்துவமனையில் மது ராந்தகம் வட்டத்திற்குட்பட்ட அருங் குணம், பாக்கம், கருங்குலி உள்ளிட்ட கிராமங்களைச் சார்ந்த மக்கள் மருத்துவம் பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் ஆர்த்தோ, நியுரோ உள்ளிட்ட மருத்து வர்களும், சிடி ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களும் இல்லை. இதனால் மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகள் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் கடித்து இரவு நேரங்களில் வட்டார மருத்துவமனைக்கு வருகிறவர் களை, மருத்துவர்கள் இல்லாததால் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
மருந்து பற்றாக்குறையாலும், ரத்த பரிசோதனை மையத்தில் பணி யாளர்கள் இல்லாததாலும் நோயாளி களை தனியார் மருந்துக் கடை களுக்கும், பரிசோதனை நிலையங்க ளுக்கும் அனுப்பி வைப்பதாக கூறப்படுகிறது. பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தால் ஆயிரம் ரூபா யும், பெண் குழந்தை பிறந்தால் 800 ரூபாயும் லஞ்சம் பெறப்படுவ தாகவும் பொது மக்கள் தொடர்ந்து குற்றம் சாற்றி வருகின்றனர். மருத்துவமனைக்கு வரும் அனைத்து நோயாளிகளுக்கும் மருத்துவம் பார்க்காமல் அலைக்கழிக்கும் நிலை உள்ளது. இந்நிலையில், மருத்துவமனை சீர்கேட்டை உடனடியாக சரி செய்ய வேண்டும், காலியாக உள்ள மருத்து வர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், வட்ட தலைமை மருத்துவ மனையை 24 மணி நேரமும் இயங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மருத்துவமனை முன்பு இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம், அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
வாலிபர் சங்கத்தின் மதுராந்த கம் ஒன்றியச் செயலாளர் க.ஜீவா னந்தம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலை வர் மபா.நந்தன், செயலாளர் க.புரு ஷோத்தமன், அச்சிறுப்பாக்கம் ஒன்றிய செயலாளர் கு.அசோக், மாதர் சங்க மாநிலச் செயலாளர் வ.பிரமிளா, மதுராந்தகம் ஒன்றியச் செயலாளர் இந்திரா, மாவட்டக்குழு உறுப்பினர் அனுசயா, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தமிழ்பாரதி உள்ளிட்டோர் பேசினர். இதன்பின்னர் மருத்துவமனை தலைமை மருத்துவர் மணிபாரதி யிடம் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனுவை வழங்கினர்.