கோபி, நவ.13- இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப் பினர் கே.சுப்பராயன் தலைமை யில் பொதுமக்கள் மனுக்கொடுக் கும் போராட்டத்தில் ஈடுபட்ட னார். ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையம் தாலுகாவிற் குட்பட்ட பெரியகோடிவெரி, சின்னகொடிவேரி, கொங்கர் பாளையம், கவுண்டம்பாளையம், புஞ்சைதுறையம்பாளையம், பாரியூர், ஒடையாக்கவுண்டம் பாளையம், சத்திரம்புதூர் உள் ளிட்ட கிராமங்களில் வாழும் வீடில்லா விவசாயக்கூலித் தொழி லாளிகள் 160க்கும் மேற்பட் டோர்களுக்கும், பட்டியலின மக்களுக்கும், வீடியில்லாதவர் களுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். வய தான முதியோர்களுக்கு முதியோர் உதவித் தொகை வழங்க வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் நாடாளுமன்ற உறுப் பினர் கே.சுப்பராயன் தலைமை யில் 200க்கும் மேற்பட்டோர் புதனன்று கோபிசெட்டிபாளை யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுக்கொடுக்கும் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதன்பின்னர் கே.சுப்பராயன் எம்.பி. உள்ளிட் டோர் வட்டாட்சியர் ஜெயக் குமாரிடம் மனு அளித்தார். அப் போது அனைவருக்கும் வீட்டு மனை பட்டா வழங்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வட்டாட் சியர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
முன்னதாக, இப்போராட்டம் தொடர்பாக கே.சுப்பராயன் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறுகையில், நன்றி அறிவிப்பு செய்ய கிராமங்களுக்கு சென்ற போது ஏராளமான வீடற்ற பொது மக்கள் வீட்டு மனைப்பட்டா கேட்டு மனு அளித்தனர். அம் மனுக்களில் எனது பரிந்துரை கையெப்பம் இட்டு வட்டாட்சியரி டம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் குண்டேரிப்பள்ளம் அணை தூர் வாருதல் தொடர்பாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்ற னர். இதுகுறித்து மத்திய அமைச் சர்களை சந்தித்து பேசி அணையை தூர் வாரவும், உயர்த்தவும் நட வடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், மேட்டூர் உபரிநீர் பிரச் சனையும் தொடர்ந்து இருந்து கொண்டுள்ளது. மழை நீரை உரிய முறையில் சேகரிக்க திட்டங்கள் இல்லாத காரணத்தினால் தான் மழைநீர் வீணாகிக் வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து அபாய கட் டத்தை தாண்டியுள்ளது. இவற் றிக்கு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பட வேண்டும். இதுதொடர்பாக விரைவில் விரி வான திட்ட அறிக்கை தயாரிக் கப்பட்டு முதல்வரை சந்தித்து மனு அளிக்கப்படும் என அவர் தெரி வித்தார்.