tamilnadu

சொகுசு விடுதி உரிமையாளரிடம் ரூ.1.72 கோடி மோசடி - 6 பேர் கைது

பொள்ளாச்சி, செப்.16- பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் சொகுசு விடுதி உரிமையாளரை ஏமாற்றி ரூ.1 கோடியே 72 லட்சம் மோசடியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி உள்ளிட்ட 6 பேரை ஆனைமலை காவல்துறையினர் கைது செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆனை மலை அருகே  உள்ள கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர் முத்து(67). இவர், வங்கிக்கணக்கில் ரூ. 1கோடியே 72 லட்சம் இருப்பு வைத்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது நண்பரான அனுப்குமாரிடம் சேர்ந்து பணத்தை வங்கியில் இருந்து எடுத்து வந்துள்ளார். இதனையடுத்து, எடுத்த பணத்தை அனுப்குமாரிடமே திருப்பி கொடுத்த முத்து, மறுநாள் கொண்டு வருமாறு கூறி யுள்ளார்.

இந்நிலையில், மறுநாள் அனுப்குமாருக்கு போன் செய்தபோது அவரது அலைபேசி எண், சுவிட்ச் ஆஃப் என வந்துள்ளது. சந்தேகமடைந்த முத்து அவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனால் மனமுடைந்த முத்து ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இவ்விசாரணையில், பணத்தை மோசடி செய்த அனுப்குமார் கேரள மாநிலத்தில்  பலபேரி டம், பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக 12 வழக்குகள் உள் ளதாகவும், தனது பாதுகாப்பிற்காக 5 பேரை துப்பாக்கி  உள் ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன், துணைக்கு வைத்துள்ள தாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

  இதனைத்தொடர்ந்து, அனுப்குமார் மற்றும் அவரது கூட் டாளிகள் பொள்ளாச்சி - கேரள எல்லைப்பகுதியான செமனாம்பதி அருகே தலைமறைவாக இருப்பதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர் மிக்கிய குற்றவாளி அனுப்குமார், ஆழப்புலாவைச் சேர்ந்த சதீஷ் (30), மலப்பு ரத்தைச் சேர்ந்த சிம்ஜீத் (24), எர்ணாகுளத்தைச் சேர்ந்த மனோஜ்(30), பிலால்(25), காசர்கோட்டைச் சேர்ந்த சசி காந்த்(25) ஆகிய ஆறு பேரை கைது செய்து, அவர்களிட மிருந்த சொகுசு கார், பல லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 2 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்

. இதன்பின்னர் அனுப் குமாரை தவிர மற்ற ஐந்து போரையும் பொள்ளாச்சி குற்ற வியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த னர். முக்கியகுற்றவாளியான அனுப்குமார் உயர்மட்ட காவல்துறை கண்காணிப்பில் தீவிர விசாரணையில் இருப்ப தாக காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.