tamilnadu

img

புதுநடுவலூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு மனு தாக்கல்

 பெரம்பலூர்: பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதுநடுவலூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு ஜெயந்தி நீல்ராஜ் வேட்பு மனுதாக்கல் செய்தார். பெரம்பலூர் ஊராட்சிக்குட்பட்டது புதுநடுவலூர் ஊராட்சி. இந்த ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தனலட்சுமி சீனிவாசன் குழுமத் தலைவரின் மகளும், செயலாளர் நீல்ராஜியின் மனைவியுமான ஜெயந்தி போட்டியிடுகிறார். இதையொட்டி பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதுநடுவலூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஜெயந்தி நீல்ராஜ் வேட்பு மனுதாக்கல் செய்தார். நிகழ்ச்சியில் செயலாளர் நீல்ராஜ், நிதி அலுவலர் ராஜசேகர், வக்கீல் பாபு, செந்தில்குமார், குழும பொது மேலாளர் செந்தில்குமார், தலைமை நிர்வாக அதிகாரி நந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். கரூர்: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட மொடக்கூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 6 வது வார்டு, திருமலைசாமி பாளையம் வார்டு உறுப்பினர் பதவிக்கு ரத்தினசாமி வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். நாகம்பள்ளி ஊராட்சி மன்றத்திற்கு குப்பை மேட்டுப்பட்டி வார்டு உறுப்பினர் பதவிக்கு கட்சியின் உறுப்பினர் தங்கமணி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் கே.வி.கணேசன், ஒன்றிய செயலாளர் சி.ஆர்.ராஜாமுகமது, ஒன்றிய குழு உறுப்பினர் எம்.ஆறுமுகம் உடனிருந்தனர்.