வேலூர்,ஆக.8- வேலூர் மக்களவைத் தொகுதி க்கான வாக்குப்பதிவு ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடந்தது. திமுக கூட்டணி வேட்பாளர் கதிர்ஆனந்த், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண் முகம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 1,553 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. இதில் மொத்தம் 71.51 சதவீதம் வாக்குகள் பதிவாகின.வாக்கு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராணிப் பேட்டை பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எந்திரங்கள் வைக்கப் பட்டுள்ள அறை முன்பு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசார் இணைந்து 3 அடுக்கு பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை வெள்ளியன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். ராணுவ வீரர்களுக்கு ஆன்லைன் மூலம் தபால் வாக்குகள் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த வாக்குகள் மட்டும் தனியாக வைக்கப்பட்டு இருக்கும். அதில் கியூஆர் கோடு இருக்கும்.
அந்த கோடு ஸ்கேன் செய்யப்பட்ட பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். அதன்பிறகு 8.30 மணியளவில் வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். முன்னணி நிலவரம் காலை 11 மணிக்கே தெரிந்துவிடும். இதற்கான ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் வாக்கு எண்ணும் அறையில் 14 டேபிள்கள் வைக்கப்பட்டு ஒவ்வொரு டேபிளுக்கும் ஒரு மேற்பார்வையாளர், மைக்ரோ அப்சர்வர், உதவியாளர் என 3 பேர் பணியாற்றுவார்கள். மொத்தம் 24 சுற்றுகள் ஓட்டு எண்ணப்படுகிறது. கடைசி 2 சுற்றுக்கு முன்பு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்படும். அப்போது தபால் வாக்கு பதிவுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்படும். அதன்பிறகு மீண்டும் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும். அனைத்தும் முடிந்த பிறகு ஒவ்வொரு சட்டசபை தொகுதி யிலும் 5 வாக்குச்சாவடிகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க ப்படும். பின்னர் அரசியல் கட்சி முக வர்கள் முன்னிலையில் விவிபேட் டில் எந்த சின்னத்துக்கு எத்தனை ஓட்டுகள் பதிவாகி உள்ளது என்பது கணக்கிடப்படும். இதில் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும், விவி பேட்டில் பதிவான வாக்குகளுக்கும் இடையில் வேறுபாடு உள்ளதா? என்றும் ஆய்வு செய்யப்படும் என்றனர்.