சென்னை, ஜூன் 14- ரயில் நிலைய இயக்குநர், கண்காணிப்பாளர் இடையே தமிழ் மொழியில் பேசக்கூடாது என வெளியிடப்பட்ட அறிக்கையை தெற்கு ரயில்வே திரும்ப பெற்றுக்கொண்டது. தெற்கு ரயில்வே சார்பில், ரயில் நிலைய கட்டுப்பாட்டறை மற்றும் நிலைய மேலாளர்களுக்கு கடந்த புதன்கிழமை, 12ஆம் தேதியிட்டு, சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ரயில்வே கட்டுப்பாட்டறை மற்றும் நிலைய மேலாளர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளிலேயே பேசி தகவல்களை பரிமாற வேண்டும் என்றும், தமிழ் மொழியில் பேசு வதை தவிர்க்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டி ருந்தது. இதற்கு தெற்குரயில்வே ஊழியர் சங்கங்களும், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ, மதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசி யல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், தமிழ்நாட்டில் தமிழ் பேசக்கூடாது, இந்தி பேசு என்பது மொழித்திணிப்பு மட்டுமல்ல மொழி மேலாதிக்கம் என்றும், மொழி அழிப்பு என்றும் கூறியிருக்கிறார்.மேலும், தமி ழர்களின் உணர்வுகளுடன் விளை யாடுவதையும், சீண்டிப் பார்ப்பதையும் விட்டுவிட்டு, இதுபோன்ற உத்தரவு களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். இந்நிலையில், திமுகவைச் சேர்ந்த எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர், சென்னை சென்ட்ரலில் உள்ள தெற்கு ரயில்வே பொது மேலாளர் அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். இதனைத் தொடர்ந்து, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் பொறுப்பு வகிக்கும் ராகுல்ஜெயினை, திமுக வினர் நேரில் சந்தித்தனர். அப்போது, தெற்கு ரயில்வே வெளியிட்ட சுற்றறிக்கை என்பது, இந்தி மொழியை திணிக்கும் செயல் என்று குற்றம்சாட்டிய திமுகவினர், அதனை உடனடியாக வாபஸ் பெறுமாறு வலியுறுத்தினர். திமுகவின் கோரிக்கையை ஏற்ற தெற்கு ரயில்வே, உடனடியாக, ஏற்கனவே விடப்பட்ட சுற்றறிக்கைக்கு மாற்றாக, புதிய சுற்றறிக்கையை வெளி யிட்டிருக்கிறது. அதில், ரயில்வே கட்டுப்பாட்டறை மற்றும் நிலைய மேலா ளர்கள் இடையிலான பரிமாற்றத்து க்கு, புரியும் மொழியில் பேசிக் கொள்ள லாம் எனத் திருத்தம் செய்யப்பட்டு ள்ளது. எந்தெந்த மொழியில் உரையாட வேண்டும் என்ற பகுதியை நீக்கிவிட்டு புதியதாக அனுப்பப்பட்டிருக்கும் சுற்றறிக்கையில், ரயில்வே அலுவ லர்கள் தங்களது தகவல் பறி மாற்றத்தில், தவறான புரிதல் ஏற்படாத வண்ணம் உரையாடலாம் என்றும், தெற்கு ரயில்வேயில் அலுவல் சார்ந்த உரையாடல்களில் பழைய நடை முறையே தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.