tamilnadu

img

இணையவழி தேர்வு ரத்துக் கோரி மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தென்காசி, ஜூலை 17- யுஜிசி வெளியிட்டுள்ள கல்லூரி மாணவர்களுக்கான காட்டாய இணையவழி தேர்வை ரத்து செய்ய வேண்டும். கல்லூரி மாணவர்களுக்கு முந்தைய செமஸ்டர் அடிப்படையில் மதிப் பெண் வழங்க வேண்டும் உள்ளிட் டவை வலியுறுத்தி இந்திய மாண வர் சங்கத்தின் திருநெல்வேலி- தென்காசி மாவட்ட குழு சார்பாக தென்காசி தலைமை தபால் அலு வலகம் முன்பு மாவட்ட தலைவர் சத்யா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளியன்று நடை பெற்றது.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் சூர்யா, மாவட்ட குழு உறுப்பினர் பகத்சிங், அருண் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.