புதுச்சேரி, ஜூலை 11- புதுச்சேரியில் ஐந்து மாதத்திற்கான அரிசி, கோது மையை ரேஷனில் வழங்க வேண்டும் என்று அனைத்து பெண்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி யுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச குழு, சமம் சுய சார்பு இயக்கம், உதவிக் கரங்கள் அறக்கட்டளை, அபிதி அறக்கட்டளை, நம்பிக்கை பெண்கள் கூட்டமைப்பு, குடிசை வாழ்வோர் பெருமன்றம், டாக்டர் அண்ணல் அம்பேத்கர் பெண்கள் பகுத்தறிவு இயக்கம், உழைக்கும் மகளிர் ஒருங்கி ணைப்புக் குழு ஆகிய அமைப்புகள் சார்பில் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய பாஜக அரசும், புதுச்சேரி மாநில ஆளு நரும், புதுச்சேரி மாநிலத்தில் பொது விநியோக முறையை ஒழித்திட ரேஷன் கடைகளை செயல்பட விடாமல் தடுத்து புதுச்சேரி மக்களை வஞ்சித்து வரு கிறது. கொரனா காலத்தில் பிரதமர் அறிவித்துள்ள 5 மாதத்திற்கான அரிசி மற்றும் கோதுமையை உடனே ரேஷன் கடைகள் மூலம் வழங்க வேண்டும். அத்தியா வசியப் பொருட்களை கேரளம் மற்றும் தமிழகம் போல் ரேஷன் கடைகள் மூலமாக ரேஷன் கடை ஊழியர் களை வைத்து வழங்க வேண்டும். ஆசிரியர்களை வைத்து அரிசி வழங்கும் திட்டத்தை மாநில அரசு கைவிட வேண்டும். ரேஷன் கடைகள் மூலம் வழங்கு வதால் பொருட்கள் முழுமையாக மக்களுக்கு சென்று சேரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.