சென்னை,ஜூலை 22- சென்னையில் காப்பான் திரைப்பட இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசுகையில், “புதிய கல்வி கொள்கை பற்றி நடிகர் சூர்யா கருத்து தெரிவித்தி ருந்தார். அவரது கருத்து பிரதமர் மோடிக்கு கேட்டு விட்டதாக தெரிகிறது. சூர்யாவின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். புதிய கல்விக் கொள்கை பற்றி சூர்யா பேசியதன் மூலம் அவரது இன்னொரு முகம் தெரிந்தது. மாணவர்கள் படும் கஷ்டத்தை கண் எதிரே பார்த்தவர். மாணவர்களுக்கு உதவிகளை யும் சூர்யா செய்து வருகிறார். இன்றைய இளைஞர்கள் தமிழின் சிறப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.