புதுச்சேரி,ஜூன் 5- ராணுவ பலத்துடன் வந்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைஎக்காலத்திலும் அனுமதிக்கப் போவதில்லை என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திட்டவட்ட மாக தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கி நாகப்பட்டி னம் மாவட்டம் வரையிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது.இத்திட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் கீழ் தமிழகம், புதுச்சேரியில் 274 கிணறுகள் அமைக்கப்படவுள்ளன. இந்த கிணறுகள் ஒவ்வொன்றும் 3 ஆயிரத்து 500 மீட்டர் முதல் 4 ஆயிரத்து 500 மீட்டர் வரை ஆழம் கொண்ட தாக இருக்கும். விழுப்புரத்தில் 139 சதுர கி.மீட்டருக்கு கிணறு வெட்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி பிராந்தியத்தில் அரியாங்குப்பம் முதல் பனித்திட்டு வரையிலான கடற்கரையை ஒட்டிய பகுதியில்தான் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக 2 சதுர கி.மீட்டர் நிலம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.இந்தநிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பா ட்டத்தில் கலந்துகொண்டு முதல்வர் நாராயணசாமி பேசுகையில், “மத்திய அரசு அனுமதி அளித்தாலும், மாநில அரசின் அனுமதி இல்லாமல் எந்த பணியையும் செய்ய இயலாது. சுற்றுச்சூழ லுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தொழிற் சாலைகள், திட்டங்களுக்கு அரசு அனுமதி அளிக்காது என கொள்கை முடிவு எடுத்துள்ளோம். புதுச்சேரிக்கு தேவையான நல்ல திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு கொடுக்கும். மக்களின் எதிர்ப்பு கொண்ட எந்த திட்டங்களுக்கும் அரசு அனுமதி அளிக்காது. மேலும், புதுச்சேரியில் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் வேதாந்தாநிறுவனமோ அல்லது மத்திய அரசுராணுவ பலத்துடன் வந்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எக்கா லத்திலும் அனுமதிக்கப்போவதில்லை. எனது அரசை மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு கலைத்தாலும், மக்கள் நலனுக்காக முதல்வர் பதவியை தூக்கியெறிந்து மதச்சார்பற்ற அணியோடு இணைந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட தயாராக உள்ளேன்” எனக் கூறினார்.