நீலகிரி, ஜூலை 6- நீலகிரியில் 124 பேர் கொரோனாவால் பாதிப் படைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள் ளார். இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரி வித்துள்ளதாவது, தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதிக ரித்து வருகிறது. இந்நிலை யில் நீலகிரி மாவட்டத்தில் சனியன்று வரை 123 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்திருந்தனர். இந்நிலையில் ஞாயிறன்று ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்தது. இவர் களில் 41 பேர் பூரண குண மடைந்து வீடு திரும்பியுள்ள னர். மேலும், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கட்டாய முகக் கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபி டிக்க வேண்டும் என்றும், கொரோனாவின் பாதிப்பை கட்டுப்படுத்த மாவட்ட நிர் வாகம் எடுக்கும் தடுப்பு நட வடிக்கைகளுக்கு ஒத்து ழைப்பு தர வேண்டுமென வும் கேட்டு கொண்டுள் ளார்.