உதகை,பிப்.9- நீலகிரியில் காப்பி பீன்ஸ்சுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 200 வழங்க வேண்டும் என்று காபி விவசாயிகள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. நீலகிரி மாவட்ட காப்பி விவசாயி கள் மாநாடு ஞாயிறன்று நெலாக் கோட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட அம்பலமூலாவில் நடைபெற்றது. விக் னேஸ்வரா திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்ட வீ டி ஆர் நினைவு அரங்கில் நடைபெற்ற இந்த மாநாட் டிற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்டத் தலைவர் என்.வாசு தலைமை வகித்தார். எருமாடு இடைக் கமிட்டி செயலாளர் டி.கே.திலிப் வர வேற்றார். அகில இந்திய விவசா யிகள் சங்கத்தின் பொருளாளர் கிருஷ் ணபிரசாத் மாநாட்டினை துவக்கி வைத்து பேசினார். வயநாடு பிரம்ம கிரி காப்பி சங்க ஒருங்கிணைப்பாளர் ஜி.புனு கருத்துரை வழங்கினார். இம்மாநாட்டில் காப்பி கொட்டை கிலோ ஒன்றுக்கு 100 ரூபாயும், காபி பீன்ஸ் கிலோ ஒன்றுக்கு 200 ரூபாயும் கிடைத்திட அரசு தலையிட வேண்டும். காப்பி விவசாயிகளை பாதுகாத்திட அரசு நலத் திட்டங்களை உருவாக்க வேண்டும். மார்ச் 30ஆம் தேதிக்குள் ஆயிரம் காப்பி விவசாயிகளை சங்கத் தில் உறுப்பினர்களாக இணைப்பது, ஏப்ரல் 31-ஆம் தேதிக்குள் அனைத்து பஞ்சாயத்துகளிலும் காப்பி விவசா யிகளை இணைத்து மாநாடுகளை நடத்துவது என்பது உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. இதனைத்தொடர்ந்து நீலகிரி மாவட்ட காப்பி விவசாயிகள் சங்கத் தின் ஒருங்கிணைப்பாளராக ஏ.யோ கண்ணன் தலைமையில் 15 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு தேர்வு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான காப்பி விவசாயிகள் கலந்துகொண்டனர். மாநாட்டின் இறு தியில் அச்சுதன் மாஸ்டர் நன்றி கூறி னார்.