உதகை, செப்.23- குடியிருக்க வீடு கேட்டு பிக் கட்டி ஆடா, ஒசட்டி, குந்தா, கோத்த கிரி ஆகிய சுற்று வட்டார பகுதி மக்கள் நீலகிரி மாவட்ட ஆடசி யரிடம் மனு அளித்தனர். நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சி யர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில் திங்களன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடை பெற்றது. இதில் பிக்கட்டி ஆடா, ஒசட்டி, குந்தா, கோத்தகிரி ஆகிய சுற்று வட்டார பகுதிகளை சார்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருக்க வீடு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அப்போது அவர்கள் கூறு கையில், இப்பகுதிகளில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகி றோம். தாயகம் திரும்பிய மக்கள் மற்றும் தலித் மக்களான நாங்கள் படுக சமுதாய மக்களின் வீடுகள் மற்றும் தோட்டங்களில் வேலை பார்த்து கொண்டு, அவர்களுக்கு சொந்தமான வீடுகளில் குடியி ருந்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக வீடு இல்லாத கார ணத்தால், கிடைக்கும் சொற்ப வரு மானத்தை கொண்டு வாழ்வா தரத்தை நகர்த்து சிரமமாக உள் ளது. ஆகவே, எங்களுக்கு அரசின் சார்பில் குடியிருக்க வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி ஆட்சியரிடம் மனு அளித்ததாக தெரிவித்தனர். மேலும், நாங்கள் இதுவரை 12 முறை சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தும், இதுவரை எந்தவித பலனும் ஏற்படவில்லை. இதன் பின்னரும் அதிகாரிகள் நடவ டிக்கை எடுக்காவிட்டால் நாங் கள் எங்கள் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்போ, பேரூராட்சி அலுவ லகம் முன்போ காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க திட்ட மிட்டுள்ளதாக வேதனையோடு தெரிவித்தனர்.