tamilnadu

img

நீலகிரி மலை ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியது!

தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 22 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட நீலகிரி மலை ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியது.

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அண்மையில் பெய்த மழை காரணமாக மலை ரயில் பாதையில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்து ரயில் பாதை சேதமானது.

இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை இயக்கப்படும் மலை ரயில் போக்குவரத்து கடந்த 22-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 22 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட நீலகிரி மலை ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து முன்பதிவு செய்த 184 சுற்றுலாப் பயணிகளுடன் மலை ரயில் உற்சாகமாகப் புறப்பட்டுச் சென்றது. ரயிலின் முன்பு செல்பி எடுத்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.