tamilnadu

img

நீலகிரியில் தொடா்மழை: மலை ரயில் ரத்து

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 7 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையை மூடிய மண்ணை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

உதகை, அக்.17- நீலகிரி மாவட்டத்தில் தொடா் மழை யின் காரணமாக உதகை முதல் மேட்டுப் பாளையம் வரையிலான மலை ரயில் மூன்று நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.  நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட் களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலைப் பகுதிகளில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனை கருத் தில் கொண்டு மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை இயக்கப்படும் மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட வாய்ப்பி ருப்பதால் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற் றுக்கிழமை வரை (அக்.18- அக்.20) மூன்று நாட்களுக்கு மழை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுவாக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மலை ரயிலில் பயணிக்க உள்ளூா் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிக ஆா்வம் காட்டுவார்கள். இத்தகைய நிலையில் மண் சரிவு ஏற்பட்டு ரயில் பய ணங்களின்போது இயல்பு வாழ்க்கை பாதிக்கக்கூடாது என்பதற்காக இந்த மலை ரயில் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப் பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித் துள்ளது.