வேலூர், ஆக.7- வேலூர் மக்களவைத் தேர்தலில் பதி வான வாக்குகள் வெள்ளிக்கிழமை (ஆக.9) எண்ணப்படுகின்றன. வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் டி.எம்.கதிர்ஆனந்த், அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம் உள்பட மொத்தம் 28 வேட்பாளர்கள் போட்டியிட்ட னர். இதற்கான வாக்குப் பதிவு மக்கள வைத் தொகுதி முழுவதும் 1,553 வாக்குச் சாவடிகளில் திங்கள்கிழமை நடைபெற் றது. 71.51 சதவீத வாக்குகள் பதிவாகின. வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே உள்ள ராணிப்பேட்டை பொறியி யல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (ஆக.9) காலை 8 மணி முதல் பேரவைத் தொகுதி வாரியாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு பேரவைத் தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் அமைக் கப்பட்டுள்ளன. ஒரு சுற்றுக்கு 14 இயந்தி ரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்ப டும் என்பதால் அதிகபட்சம் 21 சுற்றுகளில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு, அன் றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.