சென்னை, ஏப். 11- கொரோனா தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் திரைப்படம், சின்னத்திரை உள்ளிட்ட பொழுதுபோக்குத்துறையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தத்துறையில் பணிபுரியும் தினசரி ஊதியம் பெறுவோர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். கோவிட்-19-க்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் ஜீ எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தனது நிறுவனம் சார்ந்த 5,000-க்கும் மேற்பட்ட தினசரி ஊதிய பணியாளர்களுக்கு நிதியுதவி அளிக்க முடிவு செய்துள்ளது. ஜீ நிறுவனத்தில் பணியாற்றும் 3,500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்களது சொந்த பங்களிப்பை இதற்காக அளிக்கிறார்கள்.