tamilnadu

img

கருப்பு கவுனி ரகத்திற்கு நெல் ‌ஜெயராமன் பெயரை வைக்க கோரிக்கை

புற்று நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட 

கும்பகோணம், டிச.9- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலில் ராஜேந்திரன் ராமையன் இயற்கை வேளாண் பண்ணையில் 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து அரிசி உணவு பிரியர்களுக்கு வழங்கிய நெல் ஜெயராமன் முதலாம் ஆண்டு நினை வஞ்சலி மற்றும் இயற்கை விவசாயம் குறித்து விளக்க கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் முன்னோடி இயற்கை விவ சாயி மலையப்பநல்லூர் இளங்கோவன் வரவேற்றார். இயற்கை வேளாண்மை முன்னோடி விவசாயி பந்தநல்லூர் அசோ கன் தலைமை தாங்கி பாரம்பரிய நெல் ரகங்கள் ஒவ்வொன்றும் மருத்துவ குணம் வாய்ந்தது. மனிதர்களுக்கு உள்ள நோய்களை தீர்ப்பதற்கு அவை ஒரு சிறந்த உணவு என்றார்.  நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளும், பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிடுவோம், அதனை போற்றி பாதுகாப்போம், பாரம்பரிய அரிசி வகைகளை தொடர்ந்து உட்கொள் வோம், இயற்கை வேளாண்மையில் சாகுபடி செய்வோம், பாரம்பரிய விதை சேமிப்பு மையங்களை கிராமம் தோறும் துவங்குவோம் உள்ளிட்ட உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பாரம்பரிய நெல் சேகரிப்பாளரும், இயற்கை வேளாண்மை ஆலோச கருமாகிய மருதாநல்லூர் பசுமை எட்வின் பேசுகையில், புற்று நோய்க்கு எதிர்ப்பு சக்தியை கொண்ட கருப்பு கவுனி ரகத்திற்கு நெல் ‌ஜெயராமன் பெயரை வைத்து அழைக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் அரசுக் கும் கோரிக்கை வைக்க வேண்டும். குழந் தைகள் திரவ உணவில் இருந்து திட உணவுக்கு மாறும் பொழுது முதன் முதலாக பாரம்பரிய நெல் அரிசியை சமைத்து கொடுக்க வேண்டும் என்றார். 

இயற்கை வேளாண்மை விவசாயி தேனாம்படுகை பாஸ்கரன், பாரம்பரிய நெல் ரகத்தின் அரிசியை மதிப்புக் கூட்டி அதனை சந்தைப்படுத்த வேண்டும். அதனால் விவசாயிகளுக்கு கூடுதலாக வருமானம் கிடைக்கும். மேலும் விவ சாயிகள் உழவர் உற்பத்தியாளர் நிறுவ னமாக மாறி அதன் மூலம் சந்தைப் படுத்தினால் இன்னும் கூடுதல் லாபம் கிடைக்கும் என்றார்.  இயற்கை வேளாண் விவசாயி செம்பியவரம்பல் சரவணன், முத்தை யன் ஆகியோர் தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். உதவி வேளாண் அலுவலர் சாஸ்த்தாவு, விவசாயிகள் திருநரையூர் தங்கவேலு, நாச்சியார் கோவில் பூக்கடை முத்து, குடவாசல் சிவசுப்பு, தஞ்சாவூர், திருச்சி, வேதார ணியம், சென்னை முதலிய ஊர்களிலி ருந்து இயற்கை ஆர்வலர்கள் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். நிறைவாக நெல் ஜெயராமன் நினைவாக அனை வருக்கும் மரக்கன்று வழங்கப்பட்டது. பாரம்பரிய நெல் மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, கிச்சடி சம்பா நடவு செய்துள்ள இயற்கை வேளாண் விவசாயி ராஜேந்திரன் ராமையன் நன்றி கூறினார்.