tamilnadu

img

10 லட்சம் பேரின் கொண்டாட்ட நிகழ்வில் திடீரென துப்பாக்கியால் சுட்ட 3 பேர்

கனடாவில் சுமார் 10 லட்சம் பேர் கூடியிருந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் திடீரென சிலர் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் காயமடைந்தனர்.  என்பிஏ சாம்பியன்ஷிப் கால்பந்தாட்டப் போட்டியில் டொரன்டோ ரேப்டர்ஸ் அணி வெற்றி பெற்றது. அந்த அணியைப் பாராட்டும் நிகழ்ச்சி டொரொன்டோவின் நாதன் ஃபிலிப்ஸ் சதுக்கத்தில் நடைபெற்றது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். சதுக்கத்துக்கு வெளியே உள்ள சாலைகளில் சுமார் 10 லட்சம் பேர் ஒன்று கூடி தங்கள் நகரைச் சேர்ந்த அணி வெற்றி பெற்றதைக் கொண்டாடிக் களித்திருந்தனர். அப்போது திடீரென சிலர் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் காய மடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியதாக மூவர் கைது செய்யப் பட்டனர். கூட்டத்தில் இருந்த அனைவருக்கும் இச்சம்பவம் குறித்து தெரியாததால், கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருந்தது. அணியின் பாராட்டு விழா நிறுத்தப்பட்டு, நிலைமை சீரானதன் பின்னர் பாராட்டு விழா தொடர்ந்தது.