மத்திய தரைக்கடல் வழியாக சென்ற அகதிகள் படகு விபத்துக்குள்ளானதில் 13 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
துனிசியாவில் இருந்து மத்தியதரைக்கடல் வழியாக சுமார் 50 பேர் கொண்ட அகதிகள் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. லம்பேடுசா தீவை நெருங்கிய போது எதிர்பாராத விதமாக கடல் அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த 13 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்து அங்கு அங்கு சென்ற இத்தாலி கடற்படையினர் கடலில் தத்தளித்த 22 பேரை மீட்டனர். மேலும் உயிரிழந்த 13 பெண்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.