tamilnadu

எழுத்தாளர் மன்னர்மன்னன் உடலுக்கு புதுவை முதல்வர், சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி

புதுச்சேரி, ஜூலை 7- மறைந்த எழுத்தாளர் தமிழ்மாமணி மன்னர்மன்னன் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர்மன்னன் (எ) கோபதி (92). இவர் தமிழகம்  மற்றும் புதுச்சேரி அரசுகளின் தமிழ்மாமணி, கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். வானொலியில் ஆசிரியராகவும் பணியாற்றினார். 50க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார். முதுமையின் காரணமாக  திங்களன்று (ஜூலை 6) காலமானார்.  புதுச்சேரி காந்திநகரில் வைக்கப்பட்டிருந்த அவரது  உடலுக்கு முதல்வர் நாராயணசாமி, பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் ராஜாங்கம் மூத்த தலைவர் முருகன், செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், பிரதேச குழு உறுப்பினர் கலியமூர்த்தி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் பிரதேச தலைவர் அரிகிருஷ்ணன், செயலாளர் உமா, நிர்வாகி வில்லியனூர் பழனி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதேபோல் அம்மைச்சர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும், தமிழ் அறிஞர்களும், எழுத்தாளர்களும், அரசியல் பிரமுகர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்