சென்னை,ஏப். 5- ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கிக்கணக்கு தொடங்கிய பெண்க ளுக்கு ஏப்ரல் 9-ம் தேதி வரை கருணைத் தொகை வழங்கப்படும் என்று அனைத்து பொதுத்துறை வங்கிகள் அறி வித்துள்ளன.
சமூக இடைவெளியை உறுதிப்ப டுத்தும் வகையில் தனித்தனியாகப் பணம் வழங்கப்படும் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனாவின் ஒருபகுதியாக இத்தொகை வழங்கப்படும் பெண் பயனா ளர்களது வங்கிக் கணக்கு எண்ணின் கடைசி இலக்கத்தைப் பொறுத்து பணம் அளிக்கப்படும். அனைத்து வங்கிகளும் இதில் பங்குபெறும். மூன்று மாதங்கள் வழங்கப்படும் தொகையில் இது முதல் தவணை வரும் 9ஆம் தேதிக்குள் வழங்கப்படும்.
ஏப்ரல் 9-ம் தேதிக்குப் பிறகு, பயனா ளர்கள் தங்கள் வசதிக்கேற்ப எந்த தேதியில் வேண்டுமானாலும் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. வேறு வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போது எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்று அரசு அறிவித்துள்ளது.