tamilnadu

img

குடியுரிமை மசோதா திருத்தம் செய்யாவிட்டால் ஆதரவு இல்லை: சிவசேனா

மும்பை,டிச.10- குடியுரிமை மசோதாவில் உரிய திருத்தங்கள் செய்யாவிட்டால் மாநிலங்களவையில் ஆதரவு அளிக்க மாட்டோம் என்று சிவசேனா தெரிவித்துள்ளது.  நாடாளுமன்ற மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு  மத்தியில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு சிவசேனா கட்சி எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.  இந்நிலையில் சிவசேனா தலைவரும் மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே  செவ்வாயன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், குடியுரிமை  மசோதாவில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என கூறியிருக்கிறோம். அதனை செய்யாவிடில் மாநிலங்களவையில் ஆதரவு அளிக்க மாட்டோம். மசோதாவைப் பார்த்து யாராவது பயந்தால் அவர்களின் சந்தேகத்தை அரசு தீர்த்து வைக்க வேண்டும். இந்த குடியுரிமை மசோதாவை எதிர்ப்பவர்களை தேசத் துரோகி என கூறுவதா? தாங்கள் மட்டுமே  நாட்டை காப்பாற்றுவதாக பாஜக நினைத்துக்கொண்டிருப்பது மாயை’ என்று  உத்தவ் தாக்கரே சாடினார்.