இருக்கும் இடங்களிலேயே உறுதிமொழி ஏற்றிடுக!
இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல்
புதுதில்லி, ஏப்.13- டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை அனு சரித்திடுமாறு இடதுசாரிக் கட்சிகள் அறை கூவல் விடுத்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் து.ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்-லிபரேசன்) பொதுச் செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்ட் பிளாக், பொதுச் செய லாளர் தேவபிரதா பிஸ்வாஸ், புரட்சி சோச லிஸ்ட் கட்சி பொதுச் செயலர், மனோஜ் பட்டாச் சார்யா, ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:
நாட்டு மக்கள் அனைவரும் ஏப்ரல் 14 அன்று மாலை 5 மணியளவில், சமூக முடக் கத்தின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அம் பேத்கர் ஜெயந்தியை அனுசரிக்குமாறு நாட்டு மக்களை அறைகூவி அழைக்கிறோம். அந்தச் சமயத்தில் கீழ்க்கண்ட உறுதிமொழிகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். நம் அரசமைப்புச்சட்டத்தைப் பாதுகாத்தி டுவோம். சமூக முடக்கத்தில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஏழை மக்களுக்கும் மற்றும் தேவைப்படு வோருக்கும், ரொக்க மாற்றம் மற்றும் உணவு விநியோகத்தை உடனடி யாகச் செய்திட வேண்டும்.
நம் மக்களிடையே, மத வேறுபாடின்றி, சாதி வேறுபாடின்றி, பாலின வேறுபாடின்றி அல்லது ஊனத்தைக் காரணம் காட்டாது அனைத்து மக்களின் சமூக ஒற்றுமைக்கான பிணைப்பை வலுப் படுத்திட வேண்டும். சமூக முடக்கத்தின் காலத் தில் தொற்றுக்கு எதிராகப் போராடு கிறோம் என்றபெயரில், மக்களின் வாழ்க்கை, சுதந்திரம், ஜனநாயக உரிமைகள்மீது தீண்டாமையை வெளிப்படுத்தும் விதத்தில் எவ்விதமான தாக்குதலையும் தொடுக்கக் கூடாது. எங்கள் அறைகூவல், “சமூக ஒரு மைப்பாட்டுடன் உடல் அளவில் தூரத்தை அனுசரிக்க வேண்டும்” என்பதேயொழிய, “சமூக தொலைவு” அல்ல.
அம்பேத்கரின் அறிவுரைக்கிணங்க, மக்களைப் பயிற்றுவிக்க பழமைவாதம், மூட நம்பிக்கைகள், மற்றும் தப்பெண்ணங் களுக்கு எதிராக மக்களைப் பயிற்றுவித்திட வும் உறுதி ஏற்போம். சமூக முடக்கத்தின் காலத்தில் தங்கள் உயிர்வாழ்வதற்காகவும், வாழ்வாதாரங்களுக்காகவும் திணறிக் கொண்டிருக்கும் மக்களுக்கு தாமாகவே முன்சென்று ஆதரவு மற்றும் உதவி அளித்திட வும் உறுதி எடுத்துக்கொள்வோம். அன்றைய தினம் சிலைகளுக்கு மாலை அணிவிப்பதற்காகக் கூடுவது சாத்திய மில்லை. ஆதலால் ஏப்ரல் 14 அன்று மாலை 5 மணிக்கு பாதுகாப்பாகவும், வசதியாகவும் எங்கே இருக்க முடியுமோ அங்கேயே மக்கள் இந்த உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ள னர்.
(ந.நி.)