“கோ” என்றால் கடவுள், “இல்” என்றால் இல்லம், “கோவில்” என்றால் கடவுள் உறையும் இல்லம். –இப்படித்தான் இன்று வரையில் பாடப்புத்தகங்கள் சொல்லி வருகின்றன. கோவில் என்றால் அது ஒரு குறிப்பிட்ட மதம் கூறுகிற கடவுளுக்கான இல்லம் என்று தமிழறிஞர்கள், ஆன்மீக உரையாளர்கள் யாரும் சொல்லிக் கேட்டதில்லை.
எப்போது கோவில் ஒரு மதத்திற்கான வார்த்தையாக மாறியது? மற்ற மதங்களின் வழிபாட்டுத் தலங்களை அந்தந்தப் பெயர்களில்தான் சொல்ல வேண்டும் என்ற அரசாணையோ சுற்றறிக்கையோ வந்திருக்கிறதா?
திரைப்படக் கலைஞர் ஜோதிகா கடந்த பிப்ரவரியில் நடத்தப்பட்ட ஒரு தனியார் தொலைக்காட்சி விருது நிகழ்ச்சி யில் பேசியிருக்கிறார். அது தற்போது ஒளிபரப்பப்பட் டுள்ளது. அதில் அவர் அண்மையில் தஞ்சைக்குச் சென்று வந்தது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். தஞ்சைப் பெரியகோவி லின் எழிலைச் சொல்லிவிட்டு, தான் அங்கே ஏற்கெனவே சென்றிருப்பதையும் தெரிவித்துவிட்டு, இந்த முறையும் அங்கே போகாமல் வந்துவிடாதீர்கள் என்று சில நண்பர்கள் சொல்லியனுப்பியதாகவும் கூறினார். ஆனால் தஞ்சையில் ஒரு மருத்துவமனைக்குச் சென்றபோது அங்கிருந்த நிலை மைகளைப் பார்த்தபின் கோவிலுக்குச் செல்ல மனம் வர வில்லை என்றும் கூறினார். தொடர்ந்து பேசியபோது, “கோவி லுக்கான கவனம், பராமரிப்பு போல ஏன் மருத்துவமனை களுக்கு இல்லை? உண்டியலில் பணம் போடுவது போல பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் பராமரிக்கச் செலவிடுங்கள்,” என்று வேண்டுகோள் விடுத்தார்.
தஞ்சைப் பெரியகோவிலைக் குறிப்பிட்டதால், அதன் பிறகு அவர் கூறிய எல்லாமே தங்கள் மதத்தைக் குறிவைப்பதுதான் என்று அந்த மதத்துக் கடவுள்களின் ‘காவலர்கள்’ வசைபாடத் தொடங்கிவிட்டார்கள். அந்த நேரத்தில் தஞ்சைக்குப் போகிற வாய்ப்பு அமைந்ததால் அந்தக் கோவிலைக் குறிப்பிட்டிருக்கிறார். வேறு மதங்களில் முக்கிய தலங்கள் உள்ள ஊர்களுக்குப் போயிருந்தால் அதைக் குறிப்பிட்டிருப்பார் என்ற வாத நியாயங்களை ஏற்க இவர்கள் தயாராக இல்லை.
கிராமங்களின் எளிய மக்கள், நகரங்களின் அடித்தட்டு மக்கள் இப்போதும் அம்மன் கோவில், சிவன் கோவில், பெருமாள் கோவில், பிள்ளையார் கோவில், முருகன் கோவில் என்று சொல்வது போல அல்லா கோவில், ஏசு கோவில், மாதா கோவில் என்றே சொல்கிறார்கள். அவர்களுக்குத் தெரியும், “கோவிலைப் பராமரிப்பதில் கவனம் செலுத்துவது போல” என்றால் அது எல்லா சாமிக் கோவில்களும்தான்; “பள்ளிகள், மருத்துவ மனை களைப் பராமரிக்கவும் செலவிடுங்கள்” என்றால் அது எல்லா மதங்களையும் சேர்ந்தவர்களுக்கான மருத்துவ மனை கள்தான் என்று. ஆனாலும் இது மத விவகார மாக்கப்படுகிறது என்றால், அதே கிராமத்து எளிய மக்களும் நகரத்து அடித்தட்டு மக்களும் சொல்வதைத்தான் எடுத்துக்காட்ட வேண்டியிருக்கிறது: “அந்தக் கடவுளுக்கே இது அடுக்காது.” ஆனால், எளிய மக்கள் சொல்வ தெல்லாம் எப்போது காதில் விழுந்திருக்கிறது?
இந்தக் கேள்வி சமர்ப்பிக்கப்படுவது, கோவில் என்றால் அது தங்களுடைய மதத்தின் வழிபாட்டுத் தலத்தைக் குறிப்பிடும் சொல்தான் என்று வரிந்துகட்டுகிற வர்களுக்கு மட்டுமல்ல; அது அந்த மதத்திற்கான சொல்தான், தங்களைக் குறிப்பிடுவதில்லை என்று ஒதுங்குகிறவர்க ளுக்கும்தான். ஒன்று உறுதியாகப் புரிகிறது. தற்போதைய கொரோனா பாதிப்புகளிலிருந்தும் பதைப்புகளிலிருந்தும் உலகம் விடுபட்ட பிறகாவது மத வேலிகளைத் தாண்டிய நல்லி ணக்கம் கெட்டிப்படாதா என்று ஏங்குகிறவர்களும் இருக்கிறார்கள். எங்கே அப்படியொரு நல்லிணக்கம் கெட்டிப்பட்டுவிடுமோ என்று பதறுகிறவர்களும் இருக்கிறார்கள்.