tamilnadu

img

இந்தியாவில் பலி 50 பாதிப்பு 1965 பேராக அதிகரிப்பு

புதுதில்லி, ஏப்.2-  இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 50 பேராகவும் பாதிக் கப்பட்டோர் எண்ணிக்கை 1965 பேராக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தாராவியில் உள்ள சியான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் கொரோனா வுக்கு பலியாகியுள்ளார். இதேபோல் மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மேலும் 4 பேர் கொரோனா வுக்கு உயிரிழந்துள்ளனர்.

ஹரியானா மாநிலம், அம்பாலா வில் 67 வயது நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். குஜராத் மாநிலம், வதோதராவில் 52 வயது நபர் ஒருவரும், தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்திலுள்ள அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற 49 வயது நபரும் கொரோனாவுக்கு உயிரி ழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து, நாடு முழு வதும் கொரோனா வைரஸ் நோயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 பேராக அதிகரித்துள்ளது. வியா ழனன்று 131 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா நோயால் பாதித்தோரின் எண்ணிக்கை 1,965 பேராக அதிகரித்துள்ளது. 151 பேர் சிகிச்சைக்கு பிறகு, கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளதாக மத் திய சுகாதார அமைச்சகம் தெரி விக்கிறது.