tamilnadu

img

ஊரடங்கில் இன்று முதல் சில துறைகளுக்கு தளர்வு

100 நாள் தொழிலாளர்கள்  சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்

புதுதில்லி, ஏப்.19- கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்ப டுத்த நாடு முழுவதும் வரும் மே  3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கொரோனா பாதிப்பின்  அதிதீவிர பகுதிகள் ( ஹாட்ஸ்பாட்) தவிர்த்து, குறைவான பாதிப்பு உள்ள இடங்களில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. உள்துறை அமைச்சகம் வெளியிட்ட இந்தத் தளர்வுகள் இன்று (திங்கள்)முதல் அமலுக்கு வருகின்றன. இது குறித்த விவரங்களை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-

  1.     ஆயுஷ் உள்பட அனைத்து மருத்துவ சேவைகள் செயல்படும்.
  2.     வேளாண் மற்றும் தோட்டத் தொழில்களுக்கு அனுமதி.
  3.     மீன்பிடித் தொழில் (கடல்/ உள்நாடு) தொடர்ந்து இயங்கும்.
  4.     தேயிலை, காப்பி, ரப்பர் தோட்டத் தொழில்கள், அதிகபட்சம் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம்.
  5.     கால்நடை வளர்ப்போர் தங்களது பணிகளை மேற்கொள்ளலாம்.
  6.     நிதித்துறை மற்றும் சமூக நலத்துறை செயல்படும்.
  7.     தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடரும். இதில் ஊழியர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
  8.     பொது வினியோகத்துறை செயல்படும்.
  9.     மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி.
  10.     ஆன்லைன் மூலம் கற்பித்தல் மற்றும் தொலைதூர கல்விக்கு அனுமதி.
  11.     அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யலாம்.
  12.     வர்த்தகம், தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம்.
  13.     கட்டடத் தொழில்களை தொடரலாம்
  14.     தனியார் வாகனங்களை மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்காக இயக்கலாம்.
  15.     அனைத்து மத்திய, மாநில, யூனியன் பிரதேச அலுவலகங்கள் செயல்படும்.

     

இந்த அறிவிப்புகள் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள பகுதிகளுக்கு (ஹாட்ஸ்பாட்) பொருந்தாது.