tamilnadu

img

தில்லி கொரோனா மருத்துவமனையின் பரிதாபநிலை

60 செவிலியர்கள்- ஒற்றை கழிப்பறை- குளியலறை இல்லை

புதுதில்லி, ஏப்.9- குளியலறை இல்லாத ஒற்றை கழிப் பறை மட்டுமே உள்ள அரங்கம் (ஹால்). அதில் 60 செவிலியர்கள். இதுதான் தில்லி லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாரா யண் (எல்.என்.ஜே.பி) மருத்துவமனை யில் உள்ள செவிலியர் இல்லம். தங் களை ஒரு மனிதப்பிறவியாக மதிக்க வேண்டும் என அங்குள்ள செவிலியர் கள் கதறும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளை பரா மரிக்கும் செவிலியர்களுக்கு கழிப்பறை யுடன்கூடிய தனி அறை வழங்க வேண் டும். ஆனால், தில்லி எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் பெரும்பாலான செவிலியர்கள் தங்குவதற்கான இட மாக அரங்கங்களே வழங்கப்பட்டுள் ளன. கோவிட் வார்டுக்கு அடுத்துள்ள அறைகளில் நான்கு முதல் ஐந்து செவி லியர்கள் ஒன்றாக வசிக்கின்றனர். அதற்கு அடுத்ததாக உள்ள பல் மருத் துவ பிரிவுக்கான புதிய கட்டிடத்தின் அரங்கத்தில் 60 செவிலியர்கள் வசிக் கின்றனர். 

1500 செவிலியர்களைக் கொண் டுள்ள எல்.என்.ஜே.பி மருத்துவமனை யில், கொரோனா சிகிச்சைக்கென ஒரு தொகுதியினர் ஒதுக்கப்பட்டுள்ளனர். ஒரு தொகுப்பில் (பேட்ச்) 120 செவிலி யர்கள். இவர்களுக்கு இரண்டு வாரங் கள் தொடர்ச்சியாக பணி. பணி முடிந்த பிறகு மருத்துவமனையின் இரண்டு வார கண்காணிப்பில் இருக்க வேண்டும். இந்த நேரத்தில் மூன்று முறை தொண்டை, மூக்கு ,ஈரம் பரிசோதனை நடத்தப்படும். அதில் கொரோனாபாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டால் மட் டுமே வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப் படுவார்கள். சமூகப் பரவல் ஏற்படாமல் இருக்கவே இந்த முன்னெச்சரிக்கை. இவற்றை உரிய முறையில் பின் பற்றுவதில்லை என்கிறார் கேரளத்தைச் சேர்ந்த செவிலியர் கே.ஆர்.செந்தில். மேலும் அவர் கூறுகையில், ஹாலில் கூட்டமாக படுத்துக்கொள்கிறோம். குளிப்பதற்குகூட வசதியில்லை.

கை கழுவும் வாஷ் பேசினிலிருந்து தண் ணீர் பிடித்துச் சென்று கழிப்பறையில் குளிக்க வேண்டும். பலரும் சொந்த விருப்பத்தின்பேரில் வீடுகளுக்கு போய் வருகிறார்கள். இரண்டு வாரம் பணி முடிந்தவர்கள் தனியாக கண்காணிப் பில் இருக்க இடமில்லாதோர் வீடு களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம். நோய் தொற்று உள்ளதா என்பதைக்கூட அறிந்து கொள்ள முடியவில்லை என் கிறார் பீருமேட்டைச் சேர்ந்த செந்தில்.  செந்திலின் இளைய குழந்தைக்கு ஒன்பது மாதமாகிறது. மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் ஒரு வாரம் வீட்டில் தனியாக விட்டுவிட்டு பணி யில் இருந்தார். சுமார் 30  கேரள செவி லியர்கள் தில்லியில் கோவிட் பணியில் உள்ளனர். ஐந்து நட்சத்திர வசதி யெல்லாம் வேண்டாம். குறைந்தது மனி தர்களாக கருதினால் போதும் என்கிறார் கள் இவர்கள்.