அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்க : சிபிஎம்
புதுதில்லி, ஜூலை 13- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிறையில் அடைக்கப்பட்டி ருக்கிற அரசியல் கைதிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் பலரது உடல்நிலை மிகவும் மோசமாகி இருப்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தன் ஆழ்ந்த கவலை யைத் தெரிவித்துக் கொள்கிறது. இவர்களில் சிலர் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. மிகவும் அதிக அளவில் மிகவும் மோசமான முறையில் வருந்தத்தக்க விதத்தில் அவர்கள் சிறைகளில் அடைக்கப் பட்டிருப்பதன் விளைவாகவும், அடிப்படை வசதிகள் இல்லாததன் காரணமாகவும் அவர்களின் உடல் நிலை மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. அவர்களில் பலர் வெகு காலமாகவே பலவிதமான நோய்களுக்கு ஆளானவர்கள்.
இவர்களில் அகில் கோகோ ய்க்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு, சோதனை செய்ததில் ‘பாசிடிவ்’ என்று வந்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின் றன. அதேபோன்றே வரவர ராவ் உடல்நிலையும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சிறைகளில் ஆரோக்கியமற்ற நிலைமைகள் மற்றும் நெரிசலான நிலைமைகள் காரணமாக கவுதம் நவ்லகா, அனில் டெல்டும்டே, சுதா பரத்வாஜ், ஷோமா சென் போன்ற மனித உரிமை ஆர்வலர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகக் கூடிய சாத்தியக்கூறுகள் இருந்து வரு கின்றன.
இதர அரசியல் கைதிகளில் பேரா சிரியர் சாய்பாபா நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. 90 சதவீத அளவிற்கு ஊனத்தின் தன்மையுடன் உள்ள அவர், 19 விதமான மருத்துவக் கோளாறுகளுடன் வாழ்ந்து வருபவர். இவற்றில் பல உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியவை. மனித உரிமைகள் மீதான ஐ.நா. சிறப்புப் பதிவாளர்கள் சென்ற ஆண்டு, அவர் உடல்நிலையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அவரை விடு தலை செய்திட வேண்டும் என்று கோரியிருந்தார்கள். எனவே, அனைத்து அரசியல் கைதிகளும் உடனடியாக பிணை யில் விடுவிக்கப்பட வேண்டும் என் றும், அவர்களுக்குப் போதிய அள விற்கு மருத்துவக் கவனம் அளிக்கப் பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கோருகிறது.