tamilnadu

“பாதுகாப்பான இரத்தம் உயிர்களைக் காப்பாற்றுகிறது’ தேவை கூடுதல் விழிப்புணர்வு தலசீமா நோயாளிக்கு 30 யூனிட் ரத்தம் தேவை

புதுதில்லி, ஜூன் 14- கொரோனா பரவலால் இந்தி யாவில் பிறப்பிக்கப்பட்ட ஊர டங்கு படிப்படியாக தளர்த்தப்பட் டுள்ளதால் ரத்தத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. தானம் அளிக் கப்பட்ட ரத்தத்தின் மூலம் கொரோனா பரவாது எனினும் ரத்த தானம் பெறுவதில் சிக்கல் கள் நீடிக்கின்றன. ஜூன் 14-ஆம் தேதி உலக ரத்த தான தினம் கடைபிடிக்கப்பட்டது.  இந்தாண்டு “பாதுகாப்பான இரத் தம் உயிர்களைக் காப்பாற்று கிறது’ என்பது அடிப்படை நோக்க மாக வரையறை செய்யப்பட்டுள் ளது. தி லான்செட் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகளவில் மிகப்பெரிய இரத்த பற்றாக்குறை இந்தியாவில் உள்ளது, அனை த்து மாநிலங்களும் சேர்ந்து 41 மில்லியன் யூனிட் ரத்தங்களைப் பெறுகின்றன. ரத்தம் சேகரிப்ப தில் பெரும் பற்றாக்குறையை எதிர்த்து இந்தியா போராடி வரு கிறது. உலகில் மொத்தத்தில், 78 நாடு கள் தங்கள் ரத்த தேவையில் 90 சதவீதத்திற்கும் அதிகமான தேவையை ரத்ததான தன்னார் வலர்கள் அல்லாதவர்களிடமி ருந்து பெறுகிறது.

58 நாடுகள் ரத்த தேவையில் 50 சதவீதத் திற்கும் அதிகமானதை குடும்பத் திலிருந்தோ அல்லது மாற்றுத்திற னாளிகளிடமிருந்தோ பெறு கிறது. கொரோனா ஊரடங்கு காரண மாக, இந்தியா முழுவதும் உள்ள ரத்த வங்கிகள் ரத்த பற்றாக் குறையை எதிர்கொள்கின்றன, தலசீமியா, புற்றுநோய், அவசர சிகிச்சைக்காக ரத்தம் தேவைப் படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்தி லும் ஒரு  ரத்த வங்கியை நல்ல முறையில் வைத்திருக்க வேண் டும். இரத்த மாற்றத்தின் பாது காப்பையும் உறுதி செய்ய வேண்டுமென  இந்திய பொது சுகாதார அறக்கட்டளை தலை வரும் ஐ.சி.எம்.ஆர் கொரோனா பரவல் தடுப்பு உறுப்பினருமான பேராசிரியர் கே.ஸ்ரீநாத் ரெட்டி கூறியுள்ளார். குறிப்பாக தலசீமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தம் மிகவும் அவசியம். தலசீமாவால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு சராசரியாக ஆண்டுக்கு ரூ 50,000 முதல் ரூ .2,00,000 ஆகும். ஒரு தலசீமா குழந்தைக்கு ஒவ் வொரு ஆண்டும் சராசரியாக 30 யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது.

 உலகளவில், ரத்த வங்கிகள் தங்கள் தேவைகளுக்கு தன்னார் வ ரத்த தானம் செய்பவர்களை சார்ந்துள்ளது. ஊரடங்கு காலத்தில், விபத்துகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் குறைந்த தால் ரத்த தானம் மற்றும் பயன் பாடு குறைந்தது. தற்போது ரத் தத்தின் தேவை அதிகரித்துள் ளது. ஆனால் தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்ய தயக்கம் காட்டுவதால் ரத்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ரத்தம் சேகரிப்பதற்கான வழிகாட்டுதலை சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளி யிட்டுள்ளது. அதில் வெளிநாடு பயண வரலாறு கொண்டவர்கள், கொரோனா நோயால் பாதிக்கப் பட்டவர்கள் மற்றும் கொரோனா நோயாளிகளுடன் தொடர்பு கொண்டவர்கள் ஆகியோரிட மிருந்து ரத்தம் பெறக்கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.